Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தில் ரெட் அலர்ட் இருந்த போதும் நாங்கள் விளையாடினோம்… பாகிஸ்தான் வீரர் ஆதங்கம்!

இங்கிலாந்தில் ரெட் அலர்ட் இருந்த போதும் நாங்கள் விளையாடினோம்… பாகிஸ்தான் வீரர் ஆதங்கம்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:20 IST)
பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழல் சரியில்லை என்று இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் தங்கள் தொடரை ரத்து செய்துள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. அதுபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தாங்கள் செல்ல மாட்டோம் என அறிவித்து விட்டன.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மனதளவில் பாதித்துள்ளது. ஏற்கனவே பாபர் ஆசம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் இப்போது அந்த அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘நான் பாகிஸ்தான் அணியோடு பல நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். பல சவாலான சூழல்களையும் எதிர்கொண்டு தொடரை முடித்துள்ளோம். நியுசிலாந்து அணியின் செயல் எங்களைக் காயப்படுத்தி விட்டது. 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ரோபி நடந்த போது நாடு முழுவதும் ரெட் அலர்ட் இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் தொடரை விளையாடி வெற்றி பெற்றோம்’ எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல.. ஆரஞ்சு கேப் வாங்கிட்டோம்ல..! – உற்சாகமாய் போஸ் கொடுத்த ஷிகார் தவான்!