Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியே இருக்கும்போது என் புருசன் ஏன் போகணும்? கடுப்பான பாகிஸ்தான் கேப்டன் மனைவி

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (17:23 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது நீக்கம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் அவரது மனைவி.

பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சமீபத்தில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 20 ஓவர் போட்டிக்கு பாபர் ஆசமும், டெஸ்ட் தொடருக்கு அசார் அலியும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சர்ப்ராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணிப்பதாகவும், இதனால் அகமது விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பார் எனவும் செய்திகள் கசிய தொடங்கின.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சர்ப்ராஸின் மனைவி குஷ்பாத் ”என் கணவர் கிரிக்கெட்டிலிருந்து ஏன் ஓய்வு பெற வேண்டும்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. ஆனால் தோனிக்கு எவ்வளவு வயது ஆகிறது தெரியுமா? அவரே இன்னும் கிரிக்கெட்டில் இருக்கும்போது என் கணவர் எதற்காக விலக வேண்டும்?” என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை 3 நாட்களுக்கு முன்பே எங்களுக்கு தெரியப்படுத்தியது. இதனால் என் கணவர் வருத்தம் அடையவோ, நம்பிக்கை இழக்கவோ இல்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும் இன்றி சுதந்திரமாக அவர் விளையாடுவார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்..! ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடியதால் பரபரப்பு..!!

தோனி மாதிரி ஐபிஎல்ல மட்டும விளையாட ப்ளான்! – ஓய்வு குறித்து மிட்செல் ஸ்டார்க் சூசகம்!

ஊரே நம்மள பத்திதான் பேசுது.. ரொம்ப நன்றி! – சன்ரைசர்ஸ் வீரர்களிடம் பேசிய காவ்யா மாறன்!

நாளை இருக்கிறது, நம்பிக்கையை இழக்க வேண்டாம்: காவ்யா மாறனுக்கு பிரபல நடிகர் ஆறுதல்..!

குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments