Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலோ ஆன் ஆனது தென்னாப்பிரிக்கா: 2வது இன்னிங்ஸிலும் சொதப்பல் ஆட்டம்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (14:09 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இரட்டை சதமும், ரஹானே சதமும் அடித்தனர் 
 
இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இன்று மீண்டும் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா, ஷமி மற்றும் நதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 335 ரன்கள் பின் தங்கியிருந்த தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆகி தற்போது2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசியதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய அணி இந்த போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments