Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரளிவிஜய், விராத்கோஹ்லி மீண்டும் சதம்: வலுவான நிலையில் இந்தியா

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (14:58 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் ஆரம்பித்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத்கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 23 ரன்களில் விக்கெட்டுக்களை இழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்து அசத்தினார். அவருடன் விளையாடி விராத்கோஹ்லியும் 113 பந்துகளில் சதமடித்தார். விராத்கோஹ்லி மற்றும் முரளிவிஜய் கடந்த டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சற்றுமுன் வரை இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்தால் இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments