Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியா 205/2!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (13:37 IST)
டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மூன்றாம்   டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 
 
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. 
 
2 வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜயும் களமிறங்கினர். 
 
தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்தார். அவரும் தனத் விக்கெட்டை பறிகொடுக்க கோலி, விஜயுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
 
47 ஓவர்களின் முடிவில் முரளி விஜய் 80 ரன்களுடனும், விராட் கோலி 76 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments