Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் கொடியேந்தி செல்லும் மேரி கோம், மன்ப்ரீத் சிங்! – இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:34 IST)
ஜப்பானில் நடைபெறும் பிரபலமான ஒலிம்பிக் போட்டியில் துவக்க மற்றும் இறுதி நாட்களில் இந்திய கொடியேந்தி செல்ல உள்ள வீரர்கள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் நூறுக்கும் அதிகமான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஏந்தி செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டு 8ம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியை ஏந்தி செல்வார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments