Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிர்கால ஒலிம்பிக்… சீனாவுக்கு வந்த ஜோதி!

குளிர்கால ஒலிம்பிக்… சீனாவுக்கு வந்த ஜோதி!
, புதன், 2 பிப்ரவரி 2022 (15:30 IST)
சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான ஒலிம்பிக் ஜோதி சீனாவை வந்தடைந்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம். ஆனால் சீனாவில் உய்குர் இன இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டை வைத்து அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளன.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சீனாவுக்கு வந்துள்ள ஒலிம்பிக் ஜோதி முக்கிய நகரங்கள் வழியாக பயணம் செய்ய உள்ளதாம். மலைப்பகுதிகள் வழியாகவும், சீனப்பெருஞ்சுவர் மற்றும் ட்ரோன் மூலமாகவும் சீனா முழுவதும் எடுத்து செல்லப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஷ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்