Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது: அதிரடி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:18 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் தொடர்கள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒன்றில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது 
 
இதனை அடுத்து மார்ச் 4 ஆம் தேதி நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் 12, மார்ச் 14, மார்ச் 16, மார்ச் 18, மற்றும் மார்ச் 25 ஆகிய நாட்களில் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஏற்கனவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் புனேவில் நடைபெறும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று மகாராஷ்டிரா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments