Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்… புனேவில் நடத்துவதில் சிக்கல்!

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்… புனேவில் நடத்துவதில் சிக்கல்!
, சனி, 27 பிப்ரவரி 2021 (08:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள ஒருநாள் தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் மற்றும் அதையடுத்து வரும் 5 டி 20 போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலேயே நடக்க உள்ளது.

அதையடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகளும் புனே MCA மைதானத்தில் நடக்க இருந்தன. ஆனால் இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு போட்டிகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக வீரர் அஸ்வினை மட்டம் தட்டினாரா யுவராஜ் ? நெட்டிசன்கள் விமர்சனம்