Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிகிடியின் ஒரே ஒரு ஓவரால் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி!

நிகிடியின் ஒரே ஒரு ஓவரால் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி!
, புதன், 23 செப்டம்பர் 2020 (07:18 IST)
நிகிடியின் ஒரே ஒரு ஓவரால் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக நிகிடி வீசிய 20 ஓவர் தான் என்று கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது 
 
19வது ஓவரில் முடிவு வரை ராஜஸ்தான் அணி எடுத்து இருந்த மொத்த ரன்கள் 187 ரன்கள் மட்டுமே. சென்னை அணியும் 19வது ஓவரில் 179 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 20 ஓவரில் இரண்டு நோபால்கள் மற்றும் ஒரு வைட் உள்பட மொத்தம் 30 ரன்கள் நிகிடி கொடுத்ததால் 216 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அடைய முடிந்தது 
 
20 ஆவது ஓவரில் நிகிடி 30 ரன்கள் வாரி வழங்கியதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நேற்றைய போட்டியில் பியூஷ் சாவ்லா 55 ரன்கள் கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. நிகிடி மற்றும் பியூஷ் ஆகிய இருவரும் வீசிய மோசமான பந்து வீச்சே நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IPL-2020 சென்னை அணி போராடி தோல்வி : மல்லுக்கட்டிய ராஜஸ்தான் ராயல் வெற்றி !