Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IPL-2020 சென்னை அணி போராடி தோல்வி : மல்லுக்கட்டிய ராஜஸ்தான் ராயல் வெற்றி !

IPL-2020 சென்னை அணி போராடி தோல்வி : மல்லுக்கட்டிய ராஜஸ்தான் ராயல் வெற்றி !
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (23:25 IST)
இன்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை  அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து சாம் குர்ரன் பந்துவீச்சில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சஞ்சு சேம்சன் 6 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதில், சென்னை அணி தரப்பில், சாகர் 2 விக்கெடுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், சாவ்லா இரண்டு விக்கெட்டுகளும், கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

20 ஓவர்கள் முடிவியில்  ராஜஸ்தான் அணி  216 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு 217  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆட்டம் சூடு பிடுக்கும் என எதிர்ப்பார்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆடிய சென்னை கிங்ஸ் அணியின் டுபிளஸிஸ்        29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இன்னொரு பக்கம் தோனி தனது பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 12 பந்துகளில் 48  ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை சென்னை அணி சென்றது. அப்போது நம்பிக்கை நட்சத்திரம் டுபிளஸிஸ் அவுட் ஆகிட மேலும் இறுக்கமான சூழல் சென்னைக்கு நிலவியது.ஆனாலும் தோனியின் கடுமையான முயற்சி அணிக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு ராஜஸ்தானுக்கு சென்றது. எனவெ ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை அணி திக்கித் திணறி 200 மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                                                                             

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்- 2020; சென்னை கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்கு....