Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்
, புதன், 5 பிப்ரவரி 2020 (09:10 IST)
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றது என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது
 
இதனை அடுத்து இந்திய அணி சற்று முன்னர் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிபி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 மற்றும் 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் தற்போது கேப்டன் விராட் கோலி 27 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் அய்யர் 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் இந்திய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டி20 தொடரில் முழு வெற்றியை பெற்றது போலவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இந்திய அணி முழு வெற்றியை பெற்று சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்: U19 போட்டியில் காமெடி