Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்: U19 போட்டியில் காமெடி

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (22:17 IST)
ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே திசையில் ரன் எடுக்க ஓடிய காமெடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பாகிஸ்தான் அணி 31வது ஓவரை எதிர்கொண்டபோது அக்ரம் என்ற பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற ரன்னரால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் ஒரே திசையில் ஓடினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றினார்கள். இதனால் நல்ல பேட்ஸ்மேனான நசீர் 9 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதே போன்று பல முறை பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் ரன் அவுட் ஆகி இருப்பது தெரிந்ததே. சீனியர்கள் போலவே ஜூனியர் வீரர்களும் ரன் அவுட் ஆகி வருவதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் பந்துவீச்சை அதகளப்படுத்திய யாஸவி ஜெய்ஸ்வால் - யார் இவர்?