Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 ஓவரில் 136 ரன்கள்: வெளுத்து வாங்கும் நியூசிலாந்து

14 ஓவரில் 136 ரன்கள்: வெளுத்து வாங்கும் நியூசிலாந்து
, சனி, 4 நவம்பர் 2017 (20:01 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டி ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது.



 


இதுவரை 14 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்துள்ள நியூசிலாந்து அணி 136 ரன்களை குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முண்ட்ரோ 73 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 45 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களையும் எடுத்துள்ளார்.

இந்திய அணி பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் புவனேஷ்குமார், பும்ரா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இன்னும் ஆறு ஓவர்களே உள்ள நிலையில் கையில் ஒன்பது விக்கெட்டுக்களை வைத்துள்ள நிலையில் அடித்து ஆட ஆரம்பித்தால் 200 ரன்களை தாண்டுவதை தவிர்க்க முடியாது என்றே கருதப்படுகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இரண்டாம் பாதியில் கடும்சவால் காத்திருக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்!