Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜ்கோட்டில் இன்று 2வது டி-20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராஜ்கோட்டில் இன்று 2வது டி-20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
, சனி, 4 நவம்பர் 2017 (13:17 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை எளிதாக வென்ற இந்தியா, தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா முதல் டி-20 போட்டியை அபாரமாக வென்றுவிட்ட நிலையில் இன்று ராஜ்கோட்டில் 2வது டி-20 போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.



 
 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதால் இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் வரிசையில் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, பாண்டியா, தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்தியாவுக்கு பிளஸ்ஸாக உள்ளது. அதேபோல் பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்குமார், சாஹல், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
 
இதேபோல் நியூசிலாந்து அணியை பொருத்தவரையில் முண்ட்ரோ, மார்ட்டி கப்தில், கேப்டன் வில்லியம்சன், லாதம் ஆகியோர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள். சவுதி, பவுல்ட், சாண்ட்னெர் ஆகிய பவுலர்களும் திறமை வாய்ந்தவர்கள். நியூசிலாந்து அணியும் தொடரை இழந்துவிடாமல் இருக்க முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி