Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியுசிலாந்து… காரணம் இதுதானாம்!

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியுசிலாந்து… காரணம் இதுதானாம்!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:19 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் பாகிஸ்தானில் நடக்க இருந்தது.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.
இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது.

ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. இது தொடர்பாக ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பான பாதுகாப்பை அளித்தாலும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த முடிவை எடுக்கிறோம். அவர்களின் நிலைமையை உணர்கிறோம்’ எனக் கூறியுள்ளது. இந்த முடிவு உலகக் கிரிக்கெட் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித்தை விட இவர் கேப்டனுக்கு பொருத்தமாக இருப்பார்… சுனில் கவாஸ்கர் கருத்து!