Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசிசிஐக்கு கோலி அனுப்பிய மெஸேஜ்… மர்மம் உடையும் என இங்கிலாந்து வீரர் அறிவிப்பு!

பிசிசிஐக்கு கோலி அனுப்பிய மெஸேஜ்… மர்மம் உடையும் என இங்கிலாந்து வீரர் அறிவிப்பு!
, புதன், 15 செப்டம்பர் 2021 (17:25 IST)
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாளே கோலி பிசிசிஐக்கு தகவல் அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டி ரத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், யூகங்களும் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் டேவிட் கோவர் ‘போட்டிக்கு முதல் நாளே கோலி பிசிசிஐக்கு அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் குறித்து மெயில் அனுப்பியுள்ளார். பின்னர் எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. வரும் நாட்களில் மான்செஸ்டர் மர்மம் உடையும் வாய்ப்பு உள்ளது. மான்செஸ்டர் ரத்துக்கும் ஐபிஎல் தொடருக்கும் தொடர்பு உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி எஸ் கே முக்கிய வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?