Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் வீரருக்குக் கொரோனா ஏற்பட்டால்… பந்தில் எச்சில் தடவினால்? ஐசிசி புதிய விதிமுறை!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:46 IST)
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் போட்டிகள் நடத்தப்படும் போதும் பல பழைய விதிமுறைகள் நீக்கப்பட்டு புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன் படி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரருக்கு கொரோனா உறுதியானால் அவருக்குப் பதில் மாற்று வீரரை அந்த அணி இறக்கிக் கொள்ளலாம். ஆனால் இது ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு செல்லாது.

பந்தில் எச்சில் தடவக்கூடாது. பழக்கதோஷத்தில் அதுபோல செய்தால் ஒரு முறை மட்டுமே அதற்கு எச்சரிக்கை விடப்படும். அடுத்த முறை எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே டெஸ்ட் போட்டிகளுக்கு பொது நடுவர் முறைக்கு பதிலாக உள்ளூர் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஜூலை 8 ஆம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்குமிடையே தொடரில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments