Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிப் பெறுவது என்பதையே மறந்துவிட்டார்கள்… இலங்கை அணியை சாடிய முரளிதரன்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (17:50 IST)
இலங்கை அணியின் படுதோல்விக்கு அந்த அணியின் முத்தையா முரளிதரன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை சந்தித்த நிலையில் போராடி வெற்றி பெற்றது. இந்நிலையில் இலங்கை அணியின் தோல்வி குறித்து பலரும் காரசாரமான விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுபற்றி முத்தையா முரளிதரன் ‘பல ஆண்டுகளாக இலங்கை அணி வெற்றி பெறுவது எப்படி என்பதையே மறந்துவிட்டார்கள். இனி வரும் காலம் இலங்கை அணிக்குக் கடினமான காலமாக இருக்கும். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு போட்டியைக் கூட வெல்வது எவ்வாறு என்பது தெரிந்திருக்கவில்லை.’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments