Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையுடன் ஊர்வலம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (15:25 IST)
ஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி சாலைகளில் திறந்தவெளி பேருந்துகளில் ஊர்வலமாக சென்றனர்.

ஐபிஎல் 12 ஆவது சீசனின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் சென்னை அணியை வீழ்த்திக் கைப்பற்றியுள்ளது. 4 ஆவது முறையாகக் கோப்பையை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறைக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது மும்பை அணி.

கடந்த 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி இன்று தனது சொந்த ஊருக்குக் கோப்பையோடு சென்றது. அங்கு முக்கிய சாலைகளில் திறந்த பேருந்தில் நின்றுகொண்டு கோப்பையோடு மும்பை இந்தியன்ஸ் அணி ஊர்வலம் சென்றது. இந்த ஊர்வலத்துக்கு மும்பை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments