Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி தொடர்: மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (07:38 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன. 
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதுன. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இரண்டாம் பாதியில் புனே அணியினர் சற்று சோர்வடைந்தால், சுதாரித்துக்கொண்ட மும்பை அணி மளமளவென புள்ளிகளை குவித்தது. இதனை அடுத்து இறுதியில் மும்பை அணி 33 புள்ளிகளும் புனே அணி 23 புள்ளிகளும் எடுத்ததால் மும்பை அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
அதேபோல் நேற்று நடந்த அடுத்த போட்டியில் பெங்கால் மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. இறுதியில் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி 25 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி27 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் முடிவுக்குப் பின்னர் குஜராத், ஜெய்ப்பூர், டெல்லி மும்பை ஆகிய நான்கு அணைகளும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய இரண்டு போட்டிகளில் டெல்லி-ஹரியானா அணிகளும், பெங்களூரு-மும்பை அணிகளும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments