Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சிலோனா மெஸ்சிக்கு கொடுத்த தொகை?!- லீக் ஆன செய்தியால் ஷாக்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (13:06 IST)
பிரபல கால்பந்து அணியான பார்சிலோனாவுக்கு விளையாடுவதற்காக மெஸ்சிக்கு வழங்கப்பட்டதாக வெளியான தொகை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினாவை சேர்ந்த இவர் தற்போது லா லிகா உள்ளிட்ட போட்டிகளுக்காக பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக மட்டுமே விளையாடி வரும் மெஸ்சியை கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக பல முறை வெற்றிகளை ஈட்டி தந்துள்ளார். இந்நிலையில் மெஸ்சிக்கு 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பார்சிலோனா எவ்வளவு தொகை அளித்தது என ஸ்பெயின் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி வருடத்திற்கு 1,217 கோடி ரூபாய் சம்பளம் என்ற வகையில் 4 ஆண்டுகளுக்கு மெஸ்சிக்கு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பார்சிலோனா நிர்வாகம் இந்த செய்தியை உண்மையென்றோ, பொய் என்றோ ஒப்புக்கொள்ளாமல் குறிப்பிட்ட பத்திரிக்கை மீது வழக்கு தொடரப்போவதாக மட்டும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments