Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலிக்காக பலிகடா ஆகப்போவது இவர்தானா? தப்பித்த புஜாரா!

கோலிக்காக பலிகடா ஆகப்போவது இவர்தானா? தப்பித்த புஜாரா!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (10:17 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் நடக்க உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனால் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் 170 ரன்களை சேர்த்து தனது தேர்வு சரிதான் என நம்பவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி வரும் போது அவருக்கு வழிவிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.

ஆனால் இப்போது புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு மயங்க் அகர்வால் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரரான அவரை நீக்கினால் அவரது இடத்தில் யார் இறங்குவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா!