Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி நாளில் வெளிச்சமின்மை பிரச்சனை… நடுவர்களின் முடிவு சரியா?

கடைசி நாளில் வெளிச்சமின்மை பிரச்சனை… நடுவர்களின் முடிவு சரியா?
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:03 IST)
கான்பூர் டெஸ்ட்டின் கடைசி நாளின் போது வெளிச்சமின்மைக் காரணமாக ஒரு ஓவருக்கு முன்பாகவே போட்டி முடிக்கப்பட்டது.

கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி நூலிழையில் தப்பியது. ஐந்தாம் நாள் முடிவில் 9 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியால் கடைசி 9 ஓவர்களில் 10 ஆவது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருக்கும் முன்பே போதிய வெளிச்சம் இல்லை எனக் கூறி நடுவர்கள் போட்டியை டிரா என்று அறிவித்தனர். இது சம்மந்தமாக இந்திய ரசிகர்கள் நடுவர்களின் முடிவை குறை கூறினர்.

ஆனால் சுனில் கவாஸ்கர் மற்றும் ரஹானே ஆகியோர் நடுவர்கள் சரியான முடிவையே எடுத்தனர் என்று கூறியுள்ளனர். ஒவ்வொரு ஓவரின் போதும் நடுவர்கள் வெளிச்சத்தை சோதனை செய்து அதன் பின்னரே முடிவெடுத்தனர். ஒருவேளை அந்த ஒரு ஓவரை நடுவர்கள் வீச அனுமதித்திருந்தால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாகியிருக்கும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஸ்சிக்கு உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது!