Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா! கே எல் ராகுல் நிதானம்!

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா! கே எல் ராகுல் நிதானம்!
, திங்கள், 3 ஜனவரி 2022 (15:00 IST)
ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் இரண்டாவது டெஸ் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் காயம் காரணமாக கோலி விளையாடவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்கினார். கே எல் ராகுல் வழக்கம்போல நிதானமாக ஆட , மறுமுனையில் மயங்க் அகர்வால் சற்று வேகம் காட்டினார். ஆனால் 26 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த புஜாராவும் கே எல் ராகுல் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதற்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென வெளியேறிய கோலி; உள்ளே வந்த கே.எல்.ராகுல்..! - என்ன நடந்தது?