Publish Date: Sat, 04 Sep 2021 (17:19 IST)
Updated Date: Sat, 04 Sep 2021 (17:27 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய இறகுப் பந்து வீரர் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் இறகுப் பந்து பிரிவில் மனொஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.