Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு; தொடரை வெல்லப்போவது யார்?

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு; தொடரை வெல்லப்போவது யார்?
, ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (13:35 IST)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இலங்கை அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இன்று விசாகப்பட்டினத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மைதானம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக உள்ள இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பை இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை அணியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலே வீழ்த்துவதன் மூலம் அவர்களுக்கு ரன் குவிப்பதில் நெருக்கடி கொடுக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?