Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ஆர்.சி.பி உரிமையாளராக இருந்திருந்தால்: லாரா கூறிய தகவல்

நான் ஆர்.சி.பி உரிமையாளராக இருந்திருந்தால்: லாரா கூறிய தகவல்
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:33 IST)
நான் ஆர்சிபி உரிமையாளராக இருந்து இருந்தால் விராத் கோலியை கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய விடமாட்டேன் என முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி அவர்கள் நேற்று நடந்த போட்டியின் தோல்விக்கு பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் பெங்களூர் அணியில் தொடர்ந்து ஒரு வீரராக விளையாட இருப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் லாரா, ‘விராட் கோலியின் முடிவு தவறானது என்றும் நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் விராத் கோஹ்லியிடம் தனிப்பட்டமுறையில் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத் இருப்பேன் என்றும் ஒரு வீரராக மட்டுமின்றி ஒரு அணியின் தலைவராக அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்றும் இந்த இளைய வயதில் அவருடைய திறமை என்னை வியக்க வைக்கிறது என்றும் இத்தகைய சூழ்நிலையில் அவர் வேறு ஒருவரை பார்க்க மனமில்லை என்றும் கூறியுள்ளார் 
 
லாராவின் இந்த பேட்டியை அடுத்து ஆர்சிபி உரிமையாளர் விராத் கோலியிடம் கேப்டனாக தொடருமாறு வேண்டுகோள் விடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப் அணியின் கேப்டன் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி