Publish Date: Tue, 12 Oct 2021 (19:14 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (19:19 IST)
ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு அந்த அணியில் கேப்டனாகவும் நியமிக்கபப்ட்டார். சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டனாகவும் ஜொலித்து வரும் நிலையில் கே.எல்.ராகுல் அந்த அணியில் இர்ந்து விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.