Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்குள்ளாகவே நான் நிறபாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளேன்… மூத்த வீரர் ஆதங்கம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:48 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் தான் நிற பாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 1983 முதல் 1987 வரை நான்காண்டுகளில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன். மிகக்குறைந்த காலமே இந்திய அணியில் ஆடிய அவர் பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். சுழல்பந்து குறித்து நுணுக்கமான விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த டிவிட் ஒன்றில் ‘என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் விமர்சனங்களுக்கும் நிறவெறி பாகுபாட்டுக்கும் ஆளாகியுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக அந்த பாகுபாடு இந்தியாவுக்குள்ளும் நடந்துள்ளது’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த டிவீட் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments