Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான தருணத்தில் அசத்தும் குல்தீப்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (19:05 IST)
டாஸ் வென்று பேட்டிங் செய்து பாகிஸ்தான் அணியின் பாபர் - மாலிக் கூட்டணியை சரியான நேரத்தில் உடைத்து அசத்தியுள்ளார் குல்தீப் யாதவ்.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ட்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக், பஹர் ஷமான் ஆகியோர் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தி அசத்தினார்.
 
இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. மாலிக் - பாபர் அசாம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
 
ஆனால் அது நிலைக்கவில்லை. குல்தீப் பாபர் அசாம் விக்கெட்டை சரியான நேரத்தில் வீழ்த்தில் அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபாஷ் அகமத் 6 ரன்களில் வெளியேறினார்.
 
கேப்டனை தொடர்ந்து நன்றாக ஆடிவந்த மாலிக் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments