Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிப்புற இரைச்சல்களைப் பொருள் படுத்துவதில்லை… வெற்றிக்குப் பின் விராட் கோலி

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:56 IST)
ஓவல் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணி வெளிக்காட்டிய ஆக்ரோஷத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் கோலியின் கேப்டன்சி மற்றும் அணித்தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கோலி ‘ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து சமநிலையான அணியைத் தேர்வு செய்து விளையாடுகிறோம். அந்த அணியைக் கொண்டே வெற்றிக்காக போராடுகிறோம். புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை வைத்து பேசுவதற்கு வெளியில் பல பேர் உள்ளார்கள். வெளியில் இருந்து வரும் இரைச்சல்களை கவனிப்பதில்லை. ஒட்டுமொத்தமாக அணியினர் காட்டிய ஆக்ரோஷம் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments