Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லில் புதிதாக சேரும் இரண்டு அணிகள் பெயர் என்ன? – 6 நகரங்கள் பெயர் பரிந்துரையில்..!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ள நிலையில் அவற்றிற்கான பெயர் பரிந்துரைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் அணிகளுக்கு நகரத்தின் பெயர் வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 6 நகரங்களின் பெயர் பரிந்துரையில் உள்ளது.

கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், அகமதாபாத், லக்னோ, தர்மசாலா உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து இரண்டு நகரங்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments