Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி என்னை யோசிக்க வைத்துவிட்டார்: ஆண்டர்சன்

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
மற்றவர்களை போல கோஹ்லியை ஏன் அவுட்டாக முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் தொடங்க இருந்த போட்டி மழை குறுக்கிட்டதால் தாமதமாக நேற்று தொடங்கியது.
 
முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
 
இந்நிலையில் நேற்றயை போட்டி முடிந்த பின் அவர் கூறியதாவது:-
 
மற்றவர்களை போல கோஹ்லியை ஏன் அவுட்டாக முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார். கோஹ்லி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சி தான்.
 
இருந்தாலும் இந்த தொடரின் அடுத்த இன்னிங்ஸில் கோஹ்லியை அவுட்டாக முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments