Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்?

இங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்?
, வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
இங்கிலாந்து மக்களுக்கு மழை வேண்டும், ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மழை வேண்டாம் என்ற விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ய தொடங்கியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
 
மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி இன்று நடைபெறுமா என்பதே தெரியாதே சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வர்ணனையாளர் நிதின், இங்கு விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
அதாவது, இங்கிலாந்தில் வெப்ப தாக்கத்தால் கடுமையாக பாதித்த மக்களுக்கு மழை பெய்வது நன்றாக உள்ளது. ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்திய - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது பெரும் வருத்தமாக உள்ளது.
 
இதனைதான் அவர் விசித்தரமான சூழல் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை கேப்டன் கடைசி வரிசையில், மனைவி முதல் வரிசையில்...