Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான நடத்தை: கோலிக்கு 25% சம்பள தொகை அபராதம்...

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (20:48 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டாம் போட்டி நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் அணி தேர்விலும் களத்திலும் சர்ச்சைக்குரிய தவறுகளை நிகழ்த்தினார் கேப்டன் கோலி. குறிப்பாக 2 வது இன்னிங்ஸ் ஆடும்போது பந்து ஈரமாக இருப்பதாக நடுவர் காஃபிடம் கோலி தொடர்ந்து புகார் அளித்து தொந்தரவு செய்து வந்தார். 
 
இதற்கு நடுவர்கள் என்ன பதிலளித்தார்கள் என தெளிவாக தெரியாத நிலையில், தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பந்தைத் தரையில் ஓங்கி அடித்தார் கோலி. இதனை ஐசிசி ஆவேசமான செய்தி என கருதி சம்பளத்தில் 25% தொகை அபராதமாக செலுத்த  உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தகுதிழப்பு புள்ளியையும் கோலி பெற்றுள்ளார். 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேலான தகுதியிழப்பு புள்ளிகளை அவர் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கு தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments