Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோசமான நடத்தை: கோலிக்கு 25% சம்பள தொகை அபராதம்...

மோசமான நடத்தை: கோலிக்கு 25% சம்பள தொகை அபராதம்...
, புதன், 17 ஜனவரி 2018 (20:48 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டாம் போட்டி நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் அணி தேர்விலும் களத்திலும் சர்ச்சைக்குரிய தவறுகளை நிகழ்த்தினார் கேப்டன் கோலி. குறிப்பாக 2 வது இன்னிங்ஸ் ஆடும்போது பந்து ஈரமாக இருப்பதாக நடுவர் காஃபிடம் கோலி தொடர்ந்து புகார் அளித்து தொந்தரவு செய்து வந்தார். 
 
இதற்கு நடுவர்கள் என்ன பதிலளித்தார்கள் என தெளிவாக தெரியாத நிலையில், தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பந்தைத் தரையில் ஓங்கி அடித்தார் கோலி. இதனை ஐசிசி ஆவேசமான செய்தி என கருதி சம்பளத்தில் 25% தொகை அபராதமாக செலுத்த  உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தகுதிழப்பு புள்ளியையும் கோலி பெற்றுள்ளார். 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேலான தகுதியிழப்பு புள்ளிகளை அவர் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கு தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரை இழந்தது இந்தியா: தென் ஆப்ரிக்காவிடம் அடிபணிந்த சோகம்!