Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற புதுகேப்டன் இயான் மோர்கன் எடுத்த அதிரடி முடிவு!

டாஸ் வென்ற புதுகேப்டன் இயான் மோர்கன் எடுத்த அதிரடி முடிவு!
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (19:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 32வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இயான் மோர்கன் பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புதிய கேப்டன் மோர்கன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி வீரர் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புதிய கேப்டன் மோர்கன் அணியில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளார். பாண்டன் மற்றும் நாகர் கோட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக க்ரீன் மற்றும் மாவி இன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
 
அதேபோல் மும்பை அணியிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜேம்ஸ் பாட்டின்சனுக்கு பதிலாக நாதன் கவுல்ட்லர் களமிறங்குகிறார். இரு அணிகளின் வீரர்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
மும்பை: ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்ட்யா, சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா, நாதன் கவுல்ட்லர்,
 
கொல்கத்தா: கில், திரிபாதி, ரானா, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், ரஸல், க்ரீன், கம்மின்ஸ், ப்ரசித் கிருஷ்ணா, ஷிவம் மவி, வருன்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெய்ல் ஷார்ஜாவில் இருந்து அபுதாபிக்கு பந்தை அனுப்புவார் – புகழ்ந்த முன்னாள் வீரர்!