Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...

ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...
, வியாழன், 15 அக்டோபர் 2020 (23:14 IST)
பஞ்சாப் அணிக்காக கடந்த சில நாட்களாக விளையாட முடியாமல் இருந்த கிறிஸ் கெய்ல் இன்று களமிறங்குகிறார். இதனை அடுத்து பஞ்சாப் அணி தொடர் வெற்றி கிடைக்குமா என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட விவரங்கள் பின்வருமாறு;

பஞ்சாப்: மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், அஸ்வின், ரவி பிஷ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்,

பெங்களூர்: பின்ச், படிக்கல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப்சிங் மற்றும் சாஹல், இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில்,கிரிஸ் கெயில் 45 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அணியின் கேப்டன் கேஎஸ் ராகுல் 61 ரன்களும், பூரன் 6 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!