Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரில் விளையாடுவதை விட மகனைக் கையில் ஏந்துவதையே கோலி விரும்புகிறார் – கபில்தேவ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:42 IST)
கோலி மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புவது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘ கோலி டெஸ்ட் தொடரை விட தன் மகனை கையில் ஏந்துவதையே விரும்புகிறார். அதை நான் மதிக்கிறேன். ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி நினைத்த நேரத்தில் வரமுடியாது. ஆனால் இப்போது ஒரு வீரர் ஒரு விமானத்தையே வாங்கி குடும்பத்தோடு செல்ல முடியும். கவாஸ்கர் தனது மகன் பிறந்த போது அவரை பல மாதங்களுக்குப் பார்க்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments