Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் விளையாட உங்கள் வீரர்களை அனுப்பாதீர்கள் – ஆஸ்திரேலிய வீரரின் கருத்தால் சர்ச்சை!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:14 IST)
ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்களை அனுப்பாதீர்கள் என கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் உலக கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் போன்ற பிரான்ச்சைஸ் தொடர்களுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். உள்ளூர்போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேசப் போட்டிகளுக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ள அவர் ‘இது போன்ற தொடர்கள் பாக்கெட்டை பணத்தால் நிரப்பிக் கொள்ளவே நடத்தப்படுகின்றன. அந்த தொடர்கள் டெஸ்ட் போட்டிகளை ஒழித்துக் கட்டவே முயல்கின்றன. இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போன்றவைதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் உயிர்ப்போடு கொண்டுவரவேண்டும்’ எனக் கூறியுள்ளார். பார்டரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments