Publish Date: Fri, 20 Nov 2020 (23:14 IST)
Updated Date: Fri, 20 Nov 2020 (23:20 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பந்து வீச்சாளர் சிராஜின் தந்தை முகமது கோஸ் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.
இந்திய அண்யில் இளம் பந்து வீச்சாளர் சிராஜ் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், அவரது முகமது கோஸ் உட நலக்குறைவால் இன்று காலமானார்.
ஆனால் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளதால் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் சிராஜ் உள்ளதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.