Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… நடையைக் கட்டிய ராகுல்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:06 IST)
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது முதல் விக்கெட்டாக தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுலை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 290 ரன்கள் சேர்த்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதையடுத்து ஆடிய இந்தியா நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் நிதானமாக ராகுலும், ரோஹித் ஷர்மாவும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 46 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் கீப்பர் பேர்ஸ்டோ வசம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போது இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments