Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 4 மாசம் இருக்குல்ல..! ஒலிம்பிக்கிற்கு தயாராகும் ஜப்பான்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (12:53 IST)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 24ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கமாக அதன் தாயகமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. கிரீஸ் முழுக்க கொண்டு செல்லப்பட்ட இந்த தீபம் டோக்கியோவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதை கிரீஸிலிருந்து பெறுவதற்காக ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் ஜப்பான் விமானம் கிரீஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த போட்டிகளை நிறுத்துவதால் ஜப்பானுக்கு ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் ஒலிம்பிக் தொடங்குவதற்குள் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் என ஒலிம்பிக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மேலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதால் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments