Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 15 கோடியா? வாயைப் பிளந்த நியுசிலாந்து வீரர்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (08:45 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் நியுசிலாந்து அணியின் ஜேமிசனும் ஒருவர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேமிசன் பெங்களூர் அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்டார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தனக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது குறித்து பேசியுள்ள ஜேமிசன் ‘எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 15 கோடிக்கு எவ்வளவு நியுசிலாந்து டாலர்கள் என நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கணக்கு போட்டு பார்த்தேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments