Publish Date: Thu, 24 Mar 2022 (18:16 IST)
Updated Date: Thu, 24 Mar 2022 (18:17 IST)
எந்த சந்தேகம் என்றாலும் தோனியிடம் தான் கேட்பேன் என சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா பேட்டி அளித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இன்று ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா இன்று அளித்த பேட்டியில் அவர் அங்கே தான் இருக்கிறார் என்றும் எது என்றாலும் அவரிடம்தான் கேட்பேன் என்றும் அதனால் புதிதாக நான் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்
இங்கு கூறப்பட்டுள்ள மரபை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது