Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்ப இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா? தோனியின் முடிவால் ரசிகர்கள் சோகம்!

Advertiesment
அப்ப இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா? தோனியின் முடிவால் ரசிகர்கள் சோகம்!
, வியாழன், 24 மார்ச் 2022 (15:23 IST)
சி எஸ் கே அணியின் கேபட்ன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதாக தற்போது அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. சென்னை அணிக்காக 4 முறை கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் தோனிக்கு இந்த முறை கோப்பையோடு விடையளிக்க வேண்டும் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்..? நானா..? – பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த வீரர்!