Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 -ல் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுகிறாரா?

டி-20 -ல் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுகிறாரா?
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (22:36 IST)
முன்னாள் கேப்டன்  விராட் கோலி டி-20 போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய அணி, உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறியது,. அதன்பின், வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்தது உள்ளிட்ட தொடர்  தோல்வியால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்துள்ளது.

அதேபோல்  கேப்டன் ரோஹித் ஷர்மா மீது  முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து இலங்கையோடு ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்ய, இன்று பிசிசிஐ தேர்வுக்குழு கூட்டம் நடப்பதாகக் கூறப்பட்டது.

இதில் குறிப்பாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் ஆகிய மூத்த வீரர்கள்பற்றி ஆலோசிக்கப்படு என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் கேப்டன்  விராட் கோலி டி-20 போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தத் தகவல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம்… இன்று கூடும் பிசிசிஐ தேர்வுக்குழு!