Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 8 அணிகள் தக்க வைத்து கொண்ட வீரர்களின் விபரம்

ஐபிஎல் 8 அணிகள் தக்க வைத்து கொண்ட வீரர்களின் விபரம்
, புதன், 1 டிசம்பர் 2021 (07:43 IST)
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட ஒரு சில அணிகள் மட்டுமே நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன என்பதும் மற்ற அணிகள் இரண்டு அல்லது மூன்று விரல்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய 8 அணிகளின் வீரர்களை தக்க வைத்துக் கொண்ட விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
சிஎஸ்கே: தோனி- ரூ.12 கோடி, ஜடேஜா ரூ.16 கோடி, மொயின் அலி ரூ.8 கோடி, ருத்ராஜ் ரூ.6 கோடி.
 
ஆர்.சி.பி. அணி விராட் கோலி ரூ.15 கோடி, மேக்ஸ்வெல் ரூ.11 கோடி, முகமது சிராஜ் ரூ.7 கோடி ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது; ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.57 கோடி மீதம் உள்ளது.
 
மும்பை: ரோஹித் சர்மா ரூ.16 கோடி, பும்ரா ரூ.12 கோடி, சூர்ய குமார் யாதவ் ரூ.8 கோடி, பொல்லார்ட் ரூ.6 கோடி ஆகிய நால்வரை தக்க வைத்துள்ளது; வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.48 கோடி நிதி உள்ளது.
 
ஐதராபாத்:கேன் வில்லியம்ஸ் ரூ.14 கோடி, அப்துல் சமது ரூ.4 கோடி, உம்ரன் மாலிக் ரூ.4 கோடி.
 
பஞ்சாப்: மயங்க் அகர்வால் ரூ.12 கோடி, அர்ஷிதீப் சிங்: ரூ.4 கோடி
 
டெல்லி:ரிஷப் பண்ட்: ரூ.16 கோடி, அக்சர் பட்டேல் ரூ.9 கோடி பிரித்வி ஷா ரூ.7.50 கோடி, அன்ரிச் நார்ட்ஜே ரூ.6.50 கோடி.
 
கொல்கத்தா: ரஸல் ரூ.12 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.8 கோடி, வெங்கடேஷ அய்யர் ரூ.8 கோடி, சுனில் நரேன் ரூ.6 கோடி.
 
ராஜஸ்தான்:சஞ்சு சாம்சன் ரூ.14 கோடி, பட்லர் ரூ.10 கோடி, ஜெய்ஸ்வால் ரு.4 கோடி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு