Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (07:51 IST)
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மது மற்றும் சிகரெட் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஐபிஎல் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஐபிஎல் போட்டி நடைபெறும் இடங்களில் புகையிலை மற்றும் மது விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பொருட்களின் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் எந்த இடத்திலும் புகையிலை, மது விளம்பரங்கள் இருக்காது. அதேபோல், அந்த மைதானத்தை சுற்றி உள்ள வளாகங்களில் இந்த இரண்டு பொருள்களின் விற்பனையும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புகையிலை மற்றும் மதுவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வரும் இந்த பழக்கம் அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையின் உத்தரவை ஐபிஎல் நிர்வாகம் முறையாக கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments